எண் கணிதம்
நீங்கள் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களா?
நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு மாணவர் முதல் இடம் பெறுகிறார் என்றால் அவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த எண்ணுக்கு அதிபதி சூரியன். ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் இயல்புகளைத் தெரிந்துகொள்வோமா?

பழகுவதற்கு இனிமையான சுபாவம், பார்வையில் மிடுக்கு, தன்னம்பிக்கை, எதையும் சாதிக்கும் வல்லமை, பிறரை வேலை வாங்குவதில் திறமை, மனித நேயம், எதையும் எதிர்பார்த்துப் பழகாத தன்மை போன்ற எத்தனையோ அனுகூலங்கள்.

தன் துன்பங்களை இவர்கள் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். கடின உழைப்பு, கண்டிப்பான நடத்தை, சிறந்த ஆலோசனை, துன்பங்களைக் கண்டு துவளாமை, தோல்விகளை வெற்றிகளாக்கும் தன்மை, கண்டுபிடிப்புத் திறமை, வான்வெளி ஆய்வுத் திறமை, நேர்த்தியான ஆடைத் தெரிவு போன்ற குணாதிசயங்களால் பிறரால் கவரப்படுவர். பிறர் மகிழ்ச்சியில் இவர்கள் மகிழ்வர். புகழுக்கு அடிபணிவர்.

நீதியும், நேர்மையும் இவர்களது தோழர்கள். சோம்பேறித்தனமும பொறாமையும் இவர்களின் எதிரிகள். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு அரணாக விளங்குவர். குறுக்குவழி வரவுகளை துச்சமாக மதிப்பர். நேர்மையான போக்கினால் பலரது எதிர்ப்புகளையும் சம்பாதிப்பர். இரக்க குணம் உடையவர். வாக்குறுதிகளைக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவர். கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவர். அயல்நாடுகள், மலையும், மலைசார்ந்த இடங்களில் வசிப்பதும் பகல் பொழுதும், இவர்களுக்கு கரும்பாக இனிக்கும். பிறர் சொத்துக்கு சிறிதும் ஆசைப்படமாட்டார்கள். மனசாட்சிக்குப் புறம்பாக நடக்க மாட்டார்கள். இவர்களை மதிப்புக் குறைவாக நடத்துவோரை ஓரம் கட்டிவிடுவார்கள். எதிரிகளை மன்னிக்கும் பாங்கு உண்டு. கண், வயிறு, தலை சம்பந்தமான சிறிய உபாதைகள் ஏற்படும்.

மொத்தத்தில், புகழ் விரும்பிகளானாலும் நீதியும் நேர்மையும் கொண்ட, பழகுவதற்கு இனிமையானவர்கள்.

முதலாம் எண்ணுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்துக்கள்
: A,I,J,Q,D,T,M,E,H,N,X,C,G,L,S
நன்மை தரும் எண்கள்
: 1,3,4,5,9
நிறம் 
: இளம் சிவப்பு, வெள்ளை, மஞ்சள்
ரத்தினம்
: மாணிக்கம்
ஹோரை
: சந்திரன், குரு, புதன்
திசை
: கிழக்கு, வடகிழக்கு
தொழில்
: அரசு வேலை, அரசியல், மருத்துவம், கமிஷன் தொழில்
     
 







முதலாம் எண்ணில் பிறந்த பிரபலங்கள
எண்கணிதத்தின் தந்தை கீரோ 
: 01.01.1870
சத்ரபதி சிவாஜி   
: 10.04.1627
விமான கண்டுபிடிப்பாளர் ஆர்வில் ரைட்
: 19.08.1905
நீராவி இயந்திரத்தைத் தந்; ஜேம்ஸ் வாட்
: 19.01.1736
லெனின்
: 10.04.1870
நடிகர் என்.டி.ராமராவ்
: 28.05.1922
பில்கிளிண்டன்
: 19.08.1946
மைக்கேல் ஜாக்சன் 
: 01.09.1959
இளவரசி டயானா
: 01.07.1961
தியாகராஜ பாகவதர்
: 19.05.1890
ஜெயப்பிரகாஷ் நாராயண்
: 10.10.1902



நீங்கள் இரண்டாம் எண்ணில் பிறந்தவரா?


2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2இன் அதிபதி சந்திரன்.

இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா?

வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றின் பிரதிநிதியாக இவர் இருப்பார். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். ஆனாலும், மக்களால் வெகுவாகப் போற்றப்படுவர். அனைவரை யும் அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவர்.

உலகம் உருண்டை என்று யாராவது சொன்னால், ஆமாம் அது உண்மைதான் என்பதோடு விடுவதில்லை. அதற்கு மேல் என்ன உள்ளது, வெற்றிடமாக இருந்தால் அது எவ்வளவு தூரம் உள்ளது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் இயல்பினர்;. கற்பனை வளம் மிகுந்த கருத்துக் கருவூலங்கள். இவர்களா இந்தக் காரியத்தைச் செய்தார்கள்? என பிரமிக்கவைக்கும் அளவுக்கு கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து விடுவர். கற்பனையில் கோட்டை கட்டி ஒரு அரசாங்கமே நடத்திடுவர்.

இரவு எவ்வளவு நேரமானாலும் சரி. சொந்த வீட்டிற்கு வந்தால்தான் இவர்களுக்கு நிம்மதி. இறைநம்பிக்கை மிக அதிகம். கண்கள் காந்தசக்தியுடையவை. தியானம், சூட்சுமம். ககனமார்க்கம் என்று பலருக்கும் எட்டாத சமாச்சாரங்களில் ஈடுபடுவர். ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பர். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கமாட்டார்கள். ஒரு புள்ளி கிடைத்தால் போதும். ஒரு பெரிய கோலமே போட்டுவிடுவதில் ஜித்தர்கள். இந்த எண்ணில் பிறந்த நிறைய கலைஞர்களை உலகத் திரையுலகில் காணலாம்.

பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக்கொண்டேயிருப்பர். பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது 7, 1ஆம் தேதிகளில் பிறந்தவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்வது சிறப்பாகும். மனோதிடம் குறைந்திருந்தாலும், மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவர். இளம்பராயத்தில் அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் கூட மத்திம வயதில் தேசப் புகழ்பெறுவர். சினிமா, இசை, வாதம், காவியம், ஓவியம், பத்திரிக்கைகளுக்கு புதுமையான செய்தி திரட்டுவது, ஆவி, மந்திரம், தந்திரம், மாயாஜாலம் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர்.

அவ்வப்போது அழையாவிருந்தாளியாக ஜலதோஷம், தும்மல், இருமல், தலைவலி போன்ற நீர் சம்பந்தமான நண்பர்கள் வந்து செல்வர். அடுத்தவர் மனதை அறிவதில் சமர்த்தர்கள். நல்ல துணை, வீடு, நிலம், வாகனம், பொருளாதார ஏற்றம் படிப்படியாக வந்து சேரும்.

இவர்களுக்கு எதிரிகளே இல்லை எனலாம். 9ஆம் எண்ணில் பிறந்தோர் மட்டும் இவர்களுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. சோம்பேறித்தனம் மட்டுமே இவர்களின் நட்பான எதிரி. எவ்வளவோ திறமைகளைக் கொண்ட இவர்களுக்கு யாரேனும் ஒருவர் தூண்டுகோலாக இருப்பது வாழ்வில் உயர்ச்சியைக் கூட்டும். நீர்நிலைகள், பசுமையான மரங்களைக் கண்டால் தன்னையே மறந்து விடுவர்.

2 ஆம் எண்ணுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்துக்கள்
: R,K,B,O,Z,A,I,J,Q,Y,U,V,W
நன்மை தரும் எண்கள்
: 2,7,1,6
நன்மை தரும் தேதி
: 27,11,16,20,25,29
நன்மை தரும் நிறம்
: வெள்ளை, சந்தனம்
நன்மை தரும் ரத்தினம்
: முத்து
நன்மை தரும் ஹோரை
: சந்திரன், குரு, சுக்கிரன்
நன்மை தரும் திசை
: வடகிழக்கு
நன்மை தரும் தொழில்
: நீர், விவசாயம், வானியல், எழுதுகருவி, பண்ணை

2ம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்
மகாத்மா காந்தி
: 02.10.1969
தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையா
: 02.10.1908
தாமஸ் ஆல்வா எடிசன்
: 11.02.1847
டைரக்டர் சத்யஜித்ரே
: 02.05.1921
ராஜிவ் காந்தி
: 20.08.1994
லால்பகதூர் சாஸ்திரி
: 02.10.1904
மகாகவி பாரதியார்
: 11.09.1882
காஞ்சிப் பெரியவர்
: 20.05.1894
பாடகி கே.பி சுந்தரம்பாள்
: 11.10.1908


நீங்கள் மூன்றாம் எண்ணில் பிறந்தவரா?


மூன்றாம் எண்காரர்களின் இயல்பு எப்படியிருக்கும் என்பது பற்றிக் காண்போம்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறாத இவர்கள் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, இறைபற்று, மூத்தவரை மதித்தல் போன்றவற்றால் உயர்வடைவர்இவர்கள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். ஆலோசனை வழங்குவதில் ஆதவன். பல இடங்களில் இவர்கள் சொல்வதே முடிவாக வரும்.

சிறு வயதிலிருந்தே பல செயற்கரிய காரியங்களை எளிதாகச் செய்து பெயர் பெறுவர். இவர்களது வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட, இவர்களின் பேச்சில் மயங்கி நண் பர்களாகி விடுவர்சாதிப்பவன் போதிப்பதில்லை, போதிப்ப வன் சாதிப்பதில்லை. ஆனால், 3ஆம் எண் பேர்வழிகள் போதிக்கும் கலை தெரியாமலேயே பலரைக் கவர்ந்திழுக்கும் பலே கில்லாடிகளாக இருப்பர்.

மதி நுட்பத்தால் மாட்சிமை பெறும் இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இவர்களைப் போன்றே இவர்கள் உடம்பும் மிகவும் மென்மையானதுபல உணவு வகைகள் அலர்ஜி என்ற சமாச்சாரத்தை இழுத் துக்கொண்டு வந்துவிடும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். எவர் பணமாவது இவர்கள் கையில் இருந்துகொண்டே இருக்கும். பொன் ஆபரணங்களை அதிகம் விரும்புவர். மத நம்பிக்கை அதிகம். தன் சமாச்சாரங்களை பிறரிடம் சொல்ல மாட்டார்கள். பொதுக் காரியங்களை நிறைய எடுத்துச் செயல்படும் இவர்களுக்கு இதிகாசங்கள், புராணங்கள் இனிக்கும். இவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவென்றே பெரும் கூட்டம் உண்டு. கௌரவத்தை எதிர்பார்க்கும் இவர்களுக்கு மஞ்சள் ஆடை அதிகம் பிடிக்கும். மற்றையோர் இவர்களுக்கு பணிந்து நடக்க விரும்புவர். பிறர் துன்பங்களை தன்னுடையது போல நினைத்துக் கலங்குவர்.

காமனின் கண்பார்வை போல பார்வையில் வசீகரம் உண்டு. இருப்பினும் முழு பிரம்மச்சாரிபோல் ஆச்சார புருஷர்களாக இருப்பர். புகழுக்காகவும், உயர்வுக்காகவும் மனம் அலைபாயும். இவர்களுக்கு இறையருள் அதிகமிருப்பதால் நேர்மையாளர்களாக நடந்தால் வாழ்வில் உன்னதமான உயர்வுக்கு வழி தரும்.

3ஆம் எண்ணுக்கு உகந்தவை:
நன்மை தரும் முதல் எழுத்துக்கள்
: C,G,L,S,A,I,J,Q,Y
நன்மை தரும் தேதிகள்
: 1,3,9,10,12,18,19,21,27,28,30
நன்மை தரும் கிழமை
: வியாழன், ஞாயிறு, செவ்வாய்
நன்மை தரும் நிறம்
: மஞ்சள், இளம் சிவப்பு
நன்மை தரும் ஹோரை
: குரு
நன்மை தரும் திசை
: கிழக்கு
நன்மை தரும் தொழில்
: கல்வி, தரகு, ஆலோசனை, மருத்துவம் 

  அரசியல், ராணுவம், வங்கி.

3ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
ஜெகதீஷ் சந்திரபோஸ்
: 30.11.1863
சர்.சி.வி.ராமன்
: 12.01.1879
சுவாமி விவேகானந்தர்
: 12.1.1863
அலெக்சாண்டர் கிரகாம்பெல்
: 3.3.1847
வீரபாண்டிய கட்டபொம்மன்
: 3.1.1760
பகவான் ரமணர்
: 30.12.1879
ஞானி சுத்தானந்தபாரதி
: 12.5.1897
ஹென்றி போர்டு (போர்டு கார் அதிபர்)
: 12.12.1950
திப்பு சுல்தான்
: 21.11.1750
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

நீங்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

4,13,22,31
ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் இயல்புகள் விசித்திரமானவை.

மனதில் தோன்றியதை அப்படியே வெளியே சொல்லிவிடுவர். இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லாதிருப்பது நல்லது. ஏனெனில், அந்த ரகசியத்தை அப்படியே சம்பந்தப்பட்டவர்களிடம் கூடச் சொல்லிவிடுவார்கள். தனது கருத்துக்களைத் தைரியமாக வெளியில் சொல்வார்கள். அறிவியலில் விருப்பம் அதிகம். அண்டவெளி, ஜோதிட சாஸ்திரம், மத சம்பிரதாயங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பிறரிடம் சொல்வதில் ஆர்வமுள்ளவர்கள்.

சுற்றித் திரிவதில் சுகம் காண்பவர்கள். நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதிகளாக இவர்களைப் பணியமர்த்தினால் விருப்பத்துடன் அப்பணியை ஏற்று நிறுவன வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பார்கள். தன்னம்பிக்கை மிகுதியாக இருந்தாலும், சில நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களால் மனமுடைந்துபோவர். இவர்களின் மிடுக்கான நடை, உடை, பாவனை ஆகியவை மிரட்டுவது போல் இருந்தாலும், குழந்தை மனதுடையவர்களாகவே இருப்பர்.

சட்டையை மாற்றுவதுபோல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பர். அதேநேரம், எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் நிறுவனத் தலைவரே இவர்தானோ என்று நினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பர். இவரின் புரட்சிகரமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட பலர் இவர்களுக்கு நண்பர்களாகி விடுவர்.

இல்லாதவர்களுக்கு உதவுவதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எதையும் கேள்வி ஞானத்தால் ஈர்த்து, அனைத்தும் தெரிந்தவர்களைப்போல் வெளிப்பாடு செய்துகொள்வது இவர்கள் மிக முக்கியமான குணாதிசயம். வெற்றியை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக்கொள்வதால் இடையில் வரும் வேகத் தடையானவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. துன்பங்களைக் கடந்து எப்படியும் வென்று விடுவார்கள்.

ஒரு இடத்தில் ஒரு மணிநேரம் இவர்களைப் பேசாமல் இருக்க வைப்பவர்களுக்கு; ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாகத் தைரியமாக அறிவிக்கலாம். இவர்களது பேச்சை நிறுத்துவது அவ்வளவு கடினம். எழுத்தாற்றல் மிக்க இவர்கள் பிறர் எழுத்துக்களில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர். சீர்;திருத்தவாதியான இவர்கள் அரசாங்கத்திற்கே சில சமயங்களில் சிறப்பான யோசனைகள் சொல்லி அசத்திவிடுவார்கள்.

பேசும்போது குரலை ஏற்றி, இறக்கி கையை ஆட்டிக்கொண்டே பேசுவதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொள்வர். மற்றவர்களி;; விமர்சனத்தைக் கொஞ்சங்கூடக் கண்டுகொள்ளாத இவர்கள், தன் கருத்துக்களை சபையில் ஏற்றும் வரை சளைக்க மாட்டார்கள். உலகம் உருண்டைதான் என்று சொன்னால் இல்லை... அது சதுர வடிவம் உடையது என விதண்டாவாதமும் பேசுவார்கள். தான் சொன்னதற்கேற்ப உலகப்படத்தையே மாற்ற முயற்சிப்பார்கள். இந்த விதண்டாவாத குணத்தை மட்டும் மாற்றி, உருப்படியான விஷயங்களில் தன் கருத்தைச் செலுத்தினால் இவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க இயலாது. இவர்கள் திட்டம்போட்டு வைத்திருக்கும் சில அருமையான விஷயங்களை, வெளியில் முந்திரிக்கொட்டை மாதிரி சொல்லி விடுவார்கள். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு புத்திசாலி, அதை செயலுக்குக் கொண்டு வந்து பணம் சம்பாதித்து விடுவார்.

4ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
ராமானுஜர்
: 04.04.1917
கணிதமேதை ராமானுஜம்
: 22.12.1887
திருப்பூர் குமரன்
: 04.10.1904
சர்தார் வல்லபாய் படேல்
: 31.10.1875
தாதாபாய் நௌரோஜி
: 04.09.1825
ராஜாராம் மோகன்ராய்
: 22.05.1772

ஐந்தாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்?
5.14.23 தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்ணுக்கு உரியவர்கள். ஆற்றல், அதிக உழைப்பு மனித நேயம், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்ட இவர்கள் கலை நயமிக்கவர்கள். எதிலும் ஒரு வேகத்தை காட்டுவர். தங்களின் உத்வேக செயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்து வரவில்லையானால் அவர்களை `சோம்பேறி' என்று வசைபாடவர். இவர்களின் மூளை சாட்டிலைட்டிலிருந்து சக்தி பெற்றது போல் செயல்படும். எதிலும் பரபரப்பாக இயங்குவர். ஏதாவது ஒன்றை கண்டுபிடித்த வண்ணமிருப்பர்.

பஸ்சில் இருந்தாலும் சரி, விமானத்தில் பறந்தாலும் சரி... பக்கத்திலிருப்பவர் இவரது விசிட்டிங்கார்டை கேட்டுப் பெறுமளவிற்கு பழகிவிடுவர். முடியாத சில காரியங்களைக் கூட சாதித்து விடுவேன் என்று குழந்தை போல் சவால் விடுவர். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம் அடுத்தவரால் செய்ய முடியாத காரியங்களை செய்து கெயர் பெற வேண்டும் என விரும்புவர். இவர்களின் இந்த போக்கினால் தான் உலகில் பல கண்டுபிடிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். ஆனாலும், தங்கள் வெற்றியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள். காதலில் கூட அப்படித்தான்.

ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காத இவர்கள் வெளியூர் பயணத்தை அதிகம் விரும்புவர். இயற்கைச் சூழ்நிலைகள் மிகவும் ஈர்க்கும். இவர்களுக்குப் பிடித்தமான உணவு, உடை குணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப கொடுத்து விட்டால், எதையும் செய்ய தயாராக இருப்பர். மன தைரியமும், வேகமும் நிறைந்த இவர்கள், தோல்வி ஏற்படுவதை வெகு சீக்கிரம் மறந்து அடுத்த காரியத்திற்கு தயாராகி விடுவர்.

ஐம்பெரும் பூதங்கள் இல்லையேல் உலகு இல்லை. பூமியில் இந்த 5ஆம் எண்காரர்கள் இல்லையேல் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இல்லை. துடிப்புடன் செயல்படும் இவர்களுக்கு ஊர் முழுவதும் நண்பர்கள் இருப்பர். எந்தக் கருத்தையும் உடனே வெளியிடும் இவர்கள் தன்னைப் பற்றி எதுவும் தெரிவிக்க மாட்டார்கள்.

ஐந்தாம எண் குழந்தைகளை சிறு பிராயத்திலிருந்தே நல்ல குணமுள்ள நண்பர்களுடன் பழகச் செய்ய வேண்டும். எதையும் வெகு சீக்கிரம் கிரகித்துக் கொள்ளும் இவர்களுக்கு. நல்லதை கிரகிக்க நல்ல நண்பர்கள் வேண்டுமல்லவா?

பெரும்பாலும் காதல் திருமணத்தையே விரும்புவர், எனவே நன்கு ஆலோசித்து துணையை தேர்ந்தெடுப்பது பிற்கால வாழவிற்கு உறுதுணையாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் இவ்வெண்காரர்கள் தகுந்த கல்வித் தரத்துடன் வேலையில் அமர்த்தி விட்டால் அதிபர்களின் பளுவை பாதியாக குறைத்து விடுவர்.

சகல விஷயங்களிலும் அத்துப்படியாக இருக்கும் இவ்வெண்காரர்களை எளிதில் சரணடையச் செய்வது புகழ்ச்சி மட்டுமே, பகல் தூக்கம் பிடிக்காத இவர்கள் `கலைத்துறையில்' ஜாம்பவான்களாக இருப்பர்.

5
ஆம் எண்ணில் பிறந்தவ பிரபலங்கள்
வள்ளலார் - 05.10.1823
ஷ்ரீ தியாகராஜ சுவாமிகள் (கீர்த்தனை கர்த்தா) - 05.05.1759
.. சிதம்பரம் பிள்ளை - 05.09.1872
ஜவகர்லால் நேரு - 14.11. 1889
டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் ஜனாதிபதி) - 14.11.1889
அம்பேத்கர் - 14.04.1891
சுபாஷ் சந்திரபோஸ் - 23.01.1897
திலகர் - 23.07.1856
வில்லியம் ஷேக்ஸ்யிர் - 24.04.1564

நீங்கள் ஆறாம் எண்ணில் பிறந்தவர்களா?

நீங்கள் 7ஆம் எண்ணில் பிறந்தவர்களா? 

இறைபக்தியும் சர்வ ஞானமும் கல்வியும் நளினமும் நாவில் நல்வார்த்தைகளும் நற்செயலும் இமயம் போன்ற தெய்வீகத் தன்மையும் கூடவே குழப்பங்களுக்கு உட்படுத்திக்கொள்ளும் குணமும் கொண்டவர்கள் ஏழாம் எண்காரர்கள். யாரேனும் அறிவுரை சொன்னால் இக்காலத்தில் கேட்பதற்கு ஒருவருமில்லை. ஆனால், இவ்வெண்காரரிடம் ஆலோசனை கேட்டுப் பிரபலமாகலாம் என்பது இவ்வெண்காரர்களின் சிறப்பம்சம்.

வசீகரமான முகமும் மென்மையான குணமும் கொண்ட இவர்கள், காதல் வலையில் மிக வேகமாகச் சிக்கி, 90 சதவீதம் தோற்றும் போவார்கள். தொட்டாற்சிணுங்கிபோல் அடிக்கடி நாணிக்கோணிக்கொள்வர். இவர்களுக்கு நண்பர்கள் மிகக் குறைவு. நேர்த்தியான ஆடை, அணிகலன்கள் மிகவும் பிடிக்கும்.

புகையிரத நிலையங்களுக்கு அருகில் வாழ்வோருக்கு, ஏதாவது ஒரு புகையிரதம் தாமதம் என்றாலும் அது கவிழ்ந்திருக்குமோ, ஏதாவது பிரச்சினையோ என்று குழம்புவார்கள். அதுபோலத் தம்மைக் குழப்பிக்கொண்டால்தான் இவர்களுக்கு நிம்மதியே. இவர்களுக்கு வரும் துன்பங்களை மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்குவதால், இரத்த அழுத்த நோய்க்கு மிக இலகுவாக ஆட்படுவர்.

பல நேரங்களில் மாபெரும் வெற்றிகளை மிகச் சாதாரணமாகப் பெற்று விடுவர். அதேநேரம், வெற்றி தேடிவரும் என்ற அதீத நம்பிக்கையில், கோடிகளைக் கைவிட்ட லட்சாதிபதிகளும் இவ்வெண்காரர்களுக்குள் அடக்கம். மதத்தின் பேரில் அதிகப் பற்றிருக்கும். பிறருக்குத் துன்பம் தரமாட்டார்கள். மனம் ஞான நிலையைத் தேடி அலையும்.

நல்ல நேரத்தில் பிறந்த இந்த எண்ணினர், தமது 25ஆம் வயதிலிருந்து அதிர்ஷ்டத்தினால் முன்னேறுவர். பின்னாளில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெளிவாக எடுத்துரைப்பர். போதனை, குறிசொல்வது, பொருள் வரவழைத்தல், யாருக்கும் புலப்படாத விடயங்களை ஆராய்வது போன்றவற்றால் பிறரை எளிதில் கவர்வர்.

அமைதியும் ஈகைக்குணமும் மனோபலமும் நாட்டுப்பற்றும் உடைய இவர்கள், சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். புலனடக்கம் உடையவர்கள். அடிக்கடி தூரதேசப் பயணம் மேற்கொள்வர். பொருளாதார ரீதியாக அதிகக் கஷ்டப்படுவதில்லை. அடக்கமும் ஆன்மீக ஈடுபாடும் கொண்ட தர்மத்தின் தலைவனான இவர்களுக்குப் பெரியோர் ஆசியும் கடவுளின் கருணையும் உண்டு.

ஏழாம் எண்ணுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்துக்கள்
: O,Z,R,K,B,A,I,J,Q,U,V,W
நன்மை தரும் திகதிகள்
: 1, 2, 6, 7, 10, 11, 15, 16, 19, 20, 24, 25, 28, 29
நன்மை தரும் கிழமைகள்
: ஞாயிறு, திங்கள், வெள்ளி
நன்மை தரும் நிறங்கள்
: வெள்ளை, இளஞ்சிவப்பு
நன்மை தரும் திசைகள்
: கிழக்கு, மேற்கு
நன்மை தரும் தொழில்கள்
: இலத்திரனியல், பூஜைப் பொருட்கள், ஏற்றுமதி, 

  சினிமா, அரசியல், ஆன்மிகம், சேவை நிறுவனம், 

  கட்டுமானம், சங்கீதம், அச்சகம், எழுத்துத்துறை, 

  நீதித்துறை, மருத்துவம்

7ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
இயேசுநாதர்
: டிசம்பர் 25
கிருபானந்த வாரியார்
: 25.08.1906
எம்.எஸ்.சுப்புலட்சுமி
: 16.09.1916
வாஜ்பாய்
: 25.12.1924
சார்லி சாப்ளின்
: 16.04.1889
இயற்கையின் இன்ப ரகசியங்களை இனிமையாக வாழ்வில் ரசித்து அனுபவிக்கும் இவர்கள் நல்ல பண்பும் தெய்வீகமும், தனித்துவமும், அழகு சாதனங்களில் நாட்டமும், சுகத்தை அனுபவிப்பதிலும், பிறரைக் கவர்வதிலும் வல்லவர்கள். கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். சினிமா, தொலைக்காட்சித் துறைகளில் இவர்களின் பங்கு பெரும்பான்மையானது. புதுப்புது வகைகளில் வடிவமைப்புச் செய்து ஆடை, ஆபரணத்துறையில் பெரும் பெயர் பெறுவர்.

எந்தக் காரியத்தை எடுத்தாலும் முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களிடம் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிக அதிகமாகவே செலவிடுவர். நட்சத்திர ஓட்டல்களில் ஜமாய்ப்பவர்கள் இவர்கள்தான். இயற்கையின் மேல் மிகுந்த நாட்டமுடைய இவர்கள் குளிர்ச்சியான இடங்களில் அதிகமான நேரத்தைக் கழிப்பர்.

எதற்கும் அஞ்சாத இவர்கள் கண்ணாடியில் அடிக்கடி தன் முகத்தைப் பார்த்து, இதைவிட அழகாக இருந்திருக்கலாமோ என்று வருத்தப்படுவர். அடிக்கடி தலைவாரிக் கொள்வர். ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குச் சென்றால் கையோடு அழகுச் சாதனங்களை எடுத்துச் சென்று காரிலிருந்து இறங்குமுன் ஒப்பனை போட்டுக்கொண்டு தன்னை அழகுள்ளவராகக் காட்டிக்கொள்வர். காதல், களியாட்டங்களில் அதிக ஈடுபாடுள்ள இவர்கள் பெண்களால் வாழ்வில் நல்ல மாற்றங்களைச் சந்திப்பர். மிகுந்த யோசனைக்குப் பின்பே காரியங்களில் இறங்குவர்.

இவர்கள் பூலோக வாழ்வே சிறந்தது என்றும் இதில்தான் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் உண்டு என்றும் நினைப்பர். இதுபோல் வாழ்வை நன்கு அனுபவிப்பவர்களும் இவர்கள்தான். மகான்கள் வாழ்வே மாயம் என்பர். 6ஆம் எண்ணினரோ வாழ்வே யோகம் என்பர். இவர்கள் நினைப்பதுதான் சரி என்று சொல்வர். அதுதான் நடந்தாக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பர். இதனால் இவர்கள் தங்களுக்கு அறிவுரை சொல்ல யாராவது வந்தால் சிரித்துக் கொண்டே கேட்டுக்கொள்வர். ஆனால் இவர்கள் என்ன நினைத்தார்களோ, அதை நடத்திவிட்டு, புத்திமதி சொல்லியவர்களையும் சமாளித்து விடுவர்.

பணப்புழக்கம், செல்வாக்கு, வசீகரமான தோற்றம், காவியங்களில் விருப்பம், சினிமாத் துறையில் நுழைந்தால் அதிலும் சிறப்பு என இவர்களிடம் அனுகூலங்கள் அதிகம். ஆபரணங்களை அணிவதிலும் புதுப்புது ஆடைகளை உடுத்துவதிலும் விருப்பம் கொண்டவர்கள். புகழுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் எதையும் செய்யும் திறமை உண்டு. பிறர் செய்த உதவிகளை மனதில் வைத்து அவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் குறைவே. இதனால், அவர்களது சாபத்துக்கு உட்பட நேரிடலாம். உலகம் அமைதியுடன் இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் பிறர் துன்பம் தாங்க மாட்டார்கள். இவர்கள் அடிக்கடி நீர்;, சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கு உட்படலாம். எனவே கவனம் தேவை. திருமணத்தை தாங்களாகவே பெற்றோர் சம்மதமில்லாமல் நடத்திக்கொள்ளும் இவர்கள் சரியான ஜோடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் வாழ்வு முழுக்க பல மனக்கசப்புகளைச் சந்தித்தாக வேண்டும. எந்த நல்ல காரியமும் செய்ய நினைக்கும்போது 3ஆம் எண் சம்பந்தப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.


6
ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்
மகான் அரவிந்தர்
: 15.08.1872
அண்ணாத்துரை
: 15.09.1909
காமராஜர்
: 15.07.1903
ஜெயலலிதா
: 24.02.1948


ஆறாம் எண்ணுக்கு உகந்தவை
நன்மை செய்யும் எழுத்து
: U,V,W,R,K,B
நன்மை செய்யும் தேதி
: 2,6,9,11,15,18,20,24,27,29
நன்மை செய்யும் கிழமை
: வெள்ளி, திங்கள், செவ்வாய்
நன்மை செய்யும் நிறம்
: வெள்ளை, இளம் ரோஸ்
நன்மை செய்யும் திசை
: மேற்கு
நன்மை செய்யும் தொழில்
: பெண்கள் விரும்பும் தொழில்கள், சினிமா, புடைவை, 

  எழுதுகருவி, நகைக்கடை, வீடு விற்பது, 

  பிளாஸ்டிக் ஏற்றுமதி, இறக்குமதி

நீங்கள் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களா?

 சமுதாயம் எட்டு என்றாலே ஒதுங்குகிறது என்று ஆதங்கப்படும் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களே!
இந்த எண்ணில் பிறந்த எம்.ஜி.ஆர். பாரத ரத்னா விருது பெற்றவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தன் சுயமரியாதைக் கருத்துகளால் மக்களைச் சிந்திக்க வைத்த .வெ.ராமசாமி எட்டாம் எண்காரர்தான். தொழிலதிபர் டாடாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களைப் போலவே பல பிரபலங்கள் எட்டாம் எண்ணில் பிறந்திருக்கிறார்கள்.
எட்டாம் எண்காரர்கள் நற்குணம் உடையவர்கள். பிறருக்காக உழைக்கும் உத்தமசீலர்கள். ஆனால் நீங்கள் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறாமோ என நினைத்து அஞ்சுவீர்கள். இவ்வெண்ணிற்குள் சூரியக்கதிர்கள் நுழைய முடியாததால், பச்சையம் பெற முடியாத இலை போலவும், தாமரை இலைத் தண்ணீர் போலவும், வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். இந்த எண்ணினர் நியூமராலஜியில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். சில அறிவுஜீவிகள் பாண்டித்யமே பெற்று விடுவார்கள். அது மட்டுமல்ல. இதன்மூலம் தங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்று வாழ்வில் உடனடியாக உயர்ந்துவிடுவர்எனவே, உங்களுக்கு கவலையே வேண்டாம்.
உடல்நிலை குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறிய நோய் என்றாலும் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக்கொள்வது நல்லதுஅடுத்தவருக்கு உதவும் மனப்பாங்காலும், மதிநுட்பத்தாலும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெறுவது உறுதி. எண்ணற்றவர்கள் போராடி அடையும் வாழ்வின் உச்சக்கட்ட வளர்ச்சியை, இவர்கள் எளிதில் எட்டிவிடுவர். எந்த இலக்கையும், மனோதிடத்துடன் நோக்கிப் பயணிக்கும் இவர்களுக்கு நேர்மறை நிகழ்வுகள்தான் ஏராளமாக நடக்கும்.
8
ஆம் எண்காரர்கள் கண்டவர்களிடமும் ஆலோசனை கேட்காதீர்கள். சுயமாக சிந்தித்து முன்னேறும் வலிமை உங்களிடம் உள்ளது.

எட்டாம் எண்காரர்களுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்து
: E,H,N,X
நன்மை தரும் தேதி
: 5,14,23
நன்மை தரும் கிழமை
: புதன், சனி
நன்மை தரும் நிறம்
: சாம்பல், பச்சை
நன்மை தரும் திசை
: வடக்கு
நன்மை தரும் தொழில்
: எண்ணெய், இரும்பு, கெமிக்கல், கிரானைட், வக்கீல், கார்

எட்டில் பிறந்த பிரபலங்கள்

.வெ.ராமசாமி
: 17.9.1879


எம்.ஜி.ஆர்.
: 17.1.1917


எலிசபெத் டெய்லர்
: 17.1.1901


குருநானக்
: 8.11.1470


ஜார்ஜ் பெர்னாட்ஷா
: 26.7.1856

நீங்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களா?

9, 18, 27 தேதியில் பிறந்தவர்களது எண்தான் கடைசியில் இருக்கிறதே ஒழிய, இவர்கள் எல்லாவற்றிலும் முதலிடத்தில்தான். எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கை கொண்டிருப்பர். அறிவாற்றல் மிக்கவர்கள். இவர்களின் பயமுறுத்தும் பேச்சையும், படாடோபமான செயல்களையும், வேகமான முடிவுகளையும், எதிலும் புகுந்து கலக்கும் ஆற்றலையும் பார்த்தால் இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த வல்லமை வந்தது என நினைக்கத் தோன்றும்.

இதற்கு ஒரு காரணம் உண்டு. பூமிக்கு அருகில் இருக்கும் கிரகம் செவ்வாய். இதற்கு முழுமையான ஆற்றலை அனலாகத் தருபவர் சூரியன். 9ஆம் எண்ணுக்கு சூரியனும், செவ்வாயும் அதிபதி. இதனால் அறிவில் சூரியன் போன்று பிரகாசிப்பர்.

கடகடவென சிரித்துப் பேசி, வேலைகளை எளிதில் முடித்துக் கொள்வர். சில நேரங்களில் மிகக் கடுமையாக இருந்தும் வேலையை முடிப்பர். முதன்மைப் பதவிகளை மட்டுமே விரும்புவர். இவர்களை பத்தோடு பதினொன்றாக வேலைக்கு சேர்த்துவிட்டால், அரைமணி நேரத்திலேயே சேர்த்து விட்டவர் வீடு திரும்பும் முன் இவர்கள் வீடு திரும்பிவிடுவர். கூலி வேலைக்குப் போனால் கூட அங்கே சங்கம் அமைத்துத் தலைவரான பிறகே தன் வேலையைப் பார்ப்பார். இவர்களையும் அடக்க ஒரு எண்ணினர் இருக்கிறார்கள். அவர்கள்தான் மூன்றாம் எண்காரர்கள். ஒன்பதாம் எண்காரர்களுக்கு மூன்றாம் எண்ணில் பிறந்த மனைவி அமைந்தால், மனைவி சொல்லே மந்திரம் என்பதற்கு ஒப்ப பெண்டாட்டிதாசர்களாக இருப்பர். ஆயினும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே அடைவர்.

அதீத சுறுசுறுப்பும், வேகமும், துணிவும் கொண்ட இவர்களை உணவு வகைகளைக் காட்டியே மயக்கிவிடலாம். அவ்வளவு ருசித்து உண்பர். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். ஆனால் உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. இல்லையேல் உஷ்ண நோயினால் பாதிப்பு வரலாம்.

நீதி, நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாட்டை விரும்பும் இவர்கள் மற்றவர்களும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அடக்குமுறை காட்டுவர். இவ்வாறு நடக்கவில்லையானால் குடும்பத்தினாரானாலும் குதறிவிடுவர்.

மிடுக்கான தோற்றம் கொண்ட இவர்கள் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். சாதாரணமாக வாகனத்தைச் செலுத்துவதே பந்தயம் மாதிரித்தான் இருக்கும். வாகனம் செலுத்தும்போது கவனம் தேவை. திறமையையும், உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட இவர்கள், சோம்பேறிகளைக் கண்டால் வெறுத்து ஒதுக்குவார்கள். காவல்துறையிலும், ராணுவத்திலும், உணவுக் கூடங்களிலும், பாதுகாப்புச் சேவைகளிலும் இவ்வெண்ணில் பிறந்தவர்கள் அதிகமாக ஈடுபடுவர்.

அடுத்தவர் மெச்சும்படி வாழும் இவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும் ஜொலிப்பர். அடுத்தவர்கள், இவர்களிடம் ஆலாசனை கேட்குமளவிற்குப் பல இடங்களில் பஞ்சாயத்தாராகவும்;, தைரியபுருஷர்களாகவும் இருப்பார்கள்.

எந்தப் பதவியிலிருந்தாலும் முதன்மைப் பதவியில் இருப்பர். பல நாடுகள், இடங்களுக்கு செல்வதில் பிரியப்படுவர். தன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் ஒரு பெரும் பிரளயத்தையே நடத்திவிடுவர். ரத்த ஓட்டத்தில் ஏற்ற இறக்கமுpள்ள இவர்களுக்கு காய்ச்சல் உள்ளதுபோல் உடம்பு எப்பொழுதும் உஷ்ணமாக இருக்கும். அசாத்திய மூளைத்திறன் கொண்ட இவர்கள் கோபத்தை விட்டுவிட்டால் ஊரையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

ஒன்பதாம் எண்ணுக்கு உகந்தவை:
நன்மை தரும் முதல் எழுத்து
: C,G,L,S,U,V,W,A,J,Q,Y
நன்மை தரும் தேதி
: 1,3,6,9,10,12,15,18,19,21,24,27,30
நன்மை தரும் கிழமை
: வியாழன், ஞாயிறு, செவ்வாய்
நன்மை தரும் நிறம்
: சிவப்பு, மஞ்சள்
நன்மை தரும் திசை
: தெற்கு, வடகிழக்கு
நன்மை தரும் தொழில்
: நெருப்பு சம்பந்தமானவை, இரும்பு, ஓட்டல்,

  விவசாயம், கமிஷன், கடல் கடந்த வியாபாரம்,

  பூஜை பொருட்கள், கார் விற்பனை,

  ரியல் எஸ்டேட், காவல், ராணுவம், மருத்துவம்


OCTOCLE (குடும்ப கணக்கு)

குடும்பம் ஒரு கோவில். கோவிலக திகழவேண்டும் என்றால் குடுபத்தில் எல்லோரும் நலமாக இருக்கவேண்டும். நலம் கெடுவதற்கு காரணம் ஒருவருடைய கிரகம் மற்றவர்களுடைய கிரகங்களோடு ஒப்புமையாகமல் அமைவதே ஆகும். இத்தகைய ஒப்புமை எங்கிருந்து வரும் என்றால் யாருக்கு பெயர் அமைக்கிறோமோ அவருடைய பெயர் மற்றவர்களுடைய பிறந்த தேதியோடு ஒத்து அமைந்திருக்கவேண்டும்.
அதாவது ஒருவருடைய பெயர் 19-ஆம் எண்ணில் அமைந்துள்ளது என்றால் அவருடைய பெற்றோர்கள், தம்பிகள், தங்கைகள் என குடும்பத்தாரில் மிக முக்கியமான நபர் அந்த வீட்டின் இளைய நபர் அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். கடைசி நபரின் பிறந்த தேதியோடு கூட்டவேண்டும். அவ்வாறு கூட்டிவரும் பெயர் 4,7,8 வரக்கூடாது. பெயர் 19 ஆனால் கடைசி தம்பி, குழந்தை 3-ஆம்  தேதி பிறந்திருந்தால்
19 + 3 = 22 = 4  வரும் பட்சத்தில் பெயரை திருத்திக் கொள்ள நிபுணரை அணுகவேண்டும். பெயர் 33 ஆக இருந்தால் வீட்டின் கடைசி நபர் பிறந்த தேதி 2 ஆக அமைந்தால் 33 எண் நபர் பெயரை திருத்திக் கொள்ளவேண்டும். இதற்கு தகுந்தவாறு பெயரை திருத்தி எழுதி வந்தால் கடைசி கிரகத்தோடு ஒப்புமை பெற்றுவிடும்.
எத்தனையோ குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் இணக்கமான சூழல் இல்லாமல் சிரமப்படுகின்றனர். வெளியே உள்ளவர்களோடு சுமூகமான உறவு இருக்கும். ஆனால் வீட்டில் உள்ளவர்களோடு சுமூகமான உறவு இல்லாமல் தவிப்பவர்கள் இந்த ஆக்டகல் கணக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். இதை பயன்படுத்தி பயன் அடைந்தவர்கள் ஏராளம். எந்த ஒரு கணக்கும் பயன்பாட்டிற்கு வரும் பொழுதுதான் நன்மை தீமைகளை ஆராயமுடியும். இதைப்படிக்கும் வாசகர்களும் தனது பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொழுதுதான் இந்தக் கலையின் உன்னதம் தெரியவரும். இல்லாத பட்சத்தில் எண்கணித நிபுணர்கள் சக்கரை இனிக்கும் என்று கூறுவது போல இந்த காலை வாழ்க்கை கலை என கூறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். எப்பொழுது சாப்பிட்டு பார்க்கிறோமோ அப்பொழுது தான் நமக்கு அதில் உள்ள சூட்சுமங்கள் தெரியவரும். இந்த கணக்குகளை கையில் எடுத்து காண்பிக்க முடியாது இந்த கணக்கை பயன்படுத்தி வாழ்க்கையில் அனுபவிக்கும் போதுதான் தெரியவரும்.

இனிசியாலஜி (Initiology)

ஒருவருடைய பெயரில் ஆரம்ப எழுத்து எனவும் தந்தையாரின் ஆரம்ப எழுத்து எனவும் எடுத்துக் கொள்வது. இத்தகைய இனிசியலில் எனப்படும் எழுத்திற்கு ஒருவருடைய தலையெழுத்து மற்றும் வல்லமை உண்டு.
இனிசியலாவது முறைப்படி ஒருவருடைய பெயருக்கான பலனை பகுத்துக் கூறும்பொழுது, வெளிப்படும் இனிசியலில் உள்ள கிரகம் ஒருவருடைய கிரகச் சூழலில் ஒரு பாகமாக செயல்படும். ஒருவருடைய பெயர் இயக்கத்தில், இனிசியலுக்கு என்று ஒரு முக்கிய இடம் உண்டு.
இனிசியல் என்பது ஒரு கிரகம் அந்தக் கிரகத்திற்கும் வலிமை உண்டு. அந்த கிரகத்தை மையமாக வைத்து செயல்பாடுகளும் நிகழ்கிறது. அதே கிரகத்தை மையமாக வைத்து நோய்களும் ஏற்படுகிறது என ஆய்வாளர் கூறுகிறார். இங்கு ஆய்வாளர் இனிசியல் என குறிப்பிடுவதற்கு காரணம் குழப்பமில்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே.

பெயர் எண்  கிரகம்இனிசியல் எண்  கிரகம்மொத்த எண்  கிரகம்

ஒருவருடைய உடலில் இனிசியலில், பெயர், மொத்த எண் இம்மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக  துரியம் எனப்படும் Cerebral Cortex எனப்படும் சக்கரம் வாயிலாக செயல்பாட்டிற்கு தயாராகிறது.
உதாரணத்திற்கு,
G. K U M A R
3. 2 6 4 1 2
3 + 15  = 18
இனிசியல் - 3 = குரு
பெயர் - 15  = 6 சுக்கிரன்
மொத்த எண். 18 = 9 = செவ்வாய்
முதலில் இனிசியல் மூளையில் பதிந்து பிறகு மேல்மனம், அடிமனம், ஆழ்மனம் கருமையம் என படிப்படியாக பதிவாகி ஜீவ காந்தமாக செயல்பட்டு உடலை இயக்கிக் கொண்டே, வான்காந்த பதிவாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகிறது.
இனிசியலின் இயக்கம் அந்தந்த கிரகத்தின் தன்மையை பொருத்து குறிப்பிட்ட காலம் இயங்கி பிறகு பெயரின் பதிவு செயல்பட ஆரம்பிக்கும் பிறகு மொத்த எண்ணினுடைய  பதிவு செயல்பட தொடர்ந்து எண்ணினுடைய பதிவு செயல்பட தொடர்ந்து மாற்றி, மாற்றி செயல்பட்டு கொண்டே இருக்கும்.
மேலே குறிப்பிட்டபடி முதலில் குரு கிரகத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுவார்.
பிறகு சுக்கிரனின் ஆதிக்கத்திற்கு உட்படுவார். இவ்வாறு மாறி மாறி இதே கிரகங்களின் ஆளுமையில் அவருடைய வாழ்க்கை சக்கரம் சுழன்று கொண்டிருக்கும்.
K.K  R A J A S E K A R
2 2  2 1 1 1 3 5 2 1 2  = 7
4  +  18  =  22
இனிசியல்  1+7 = 4 
பெயர் மொத்த எண்

S.M  J A Y A B H A R A T H I
3 4   1 1 1 1 2 5 1 2 1 4 5 1
7+    24        = 31
72 + 4  =  6    3 + 1  = 4
இனிசியல் பெயர் எண் மொத்த எண்.
இவ்வாறு பெயரை மூன்றாக பிரித்து இனிசியலின் பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து ஒரு எழுத்தை கூட்டியோ குறைத்தோ நம் வாழ்க்கையை சரி செய்து கொள்வது ஊர் பெயரின் முதலெழுத்தையோ, தாயாரின் பெயரின் முதல் எழுத்தையோ சேர்த்து வலிமைப்படுத்திக் கொள்வது வழக்கம்.
இனிசியல் என்பது ஒரு ரயிலுக்கு டிரைவரை போன்றது. இனிசியலுக்கு என்று ஒரு வலிமை உண்டு.

NAMELOGY (பெயரியல்)

ஒருவருடைய பெயர் எல்லோராலும் கூப்பிடும் பெயராகவும் இருக்கலாம். அல்லது கையெழுத்திடும் பெயராகவும் இருக்கலாம். இதில் கையெழுத்திடும் பெயருக்குத்தான் வலிமை மிக மிக அதிகம். கூப்பிடும் பெயர் 4 வயது வரை மட்டுமே வேலைசெய்யும். பிறகு அவர்கள் தனது மூளையில் தன் பெயரின் எழுத்துக்களை பதிக்க செய்கின்ற பொழுது அத்தகைய பதிவின் செயல்பாடு வலிமையாக செயல்படுகிறது.
ஒருவருடைய பெயர் எவ்வளவு வலிமையாக உள்ளதோ அந்தளவிற்கு அவருடைய செயல்பாடுகளில் வலிமை அதிகமாக இருக்கும். ஒருவரை குறிப்பிடும் பொழுது இன்னார் என அவருடைய பெயரை குறித்து தானே பேசுகிறோம். பெயரை வைத்து தான் அவருடைய உருவத்தையும் நம் மனம் எடுத்துக் காண்பிக்கிறது. பெயர் மகா வலிமை பொருந்தியது. சிலர் இனிசியல் என தனியாக இல்லாமல் பெயரை மட்டும் கையெழுத்தாக இடுவது உண்டு.
ஒருவருடைய பெயரை விட்டு விட்டு அவரைப் பற்றி சிந்தித்து பாருங்கள் எதுவும் நினைவில் கொள்ள இயலாது. பெயரே அவராகவும், அவரே பெயராக அமைந்துள்ளது. அவர் இல்லை என்றாலும் பெயர் இவ்வுலகில் நிலைத்து நிற்கும். அத்தகைய பெயரை பெற்றுக் கொள்வது மிக மிக அவசியம். நம்மோடு பல பெயர்கள் வாழ்கிறது. பெயர்களுக்குரியவர்கள் இல்லை. குறிப்பாக எம்.ஜி.ஆர்., ஜவஹர்லால் நேரு, காந்திஜி ... என பல பெயரை நாம் இன்றும் உபயோகிக்கிறோம். அத்தகைய பெயரை பெற பெருந்தவங்கள் பெரிய அதிர்ஷ்டங்கள் செய்திருக்க வேண்டும். இத்தகைய பெயரை பெறுவதற்கு என்ன பிரதிபலன் செய்தாலும் ஈடாகுமா என்றால் கண்டிப்பாக ஈடாகாது. பெயரே நாமாகவும் நாமே பெயராகவும் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய பெயருக்கு ஒரு பலன் உண்டு. இத்தகைய பெயரே நம்மை ஆளுமைப்படுத்துகிறது. நம் செயல்பாடுகளுக்கு முக்கிய அங்கம் வகிக்கிறது என்றால் அதை நாம் எவ்வாறு உள்ளது என அறிய வேண்டாமா? இதுவே பகுத்தறியும் தன்மையில் ஒரு பாகமாகும்.
இதில் இனிசியல் இல்லாமல் பெயருக்கு என்று ஒரு கிரகம் உண்டு. பெயருக்கு என்று ஒரு வலிமை உண்டு. இத்தகைய பெயருக்குரிய கிரகம் பிறந்த தேதியோடு ஒப்புமையாக அமையும் பட்சத்தில் மேலும் நன்மைகள் ஏற்படும். பெயருக்கு ஆரம்ப எழுத்து உண்டு. முடிவு எழுத்து உண்டு. எத்தகைய எழுத்துக்களை மாலையாக தொகுக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்தும் அதன் வலிமையை கூறமுடியும்.
இனிசியல் டிரைவர் என்றால் பெயர் இன்ஜினை போன்றது. ஒரு ரயிலுக்கு டிரைவரும் முக்கியம். இன்ஜினும் முக்கியம் என்ற அடிப்படையில் இன்ஜினின் தன்மையை பொறுத்தே டிரைவர் தனது வேலையை செயல்படுத்த முடியும். இனிசியலுக்கு என்று தனித்தன்மை உண்டு. அது பெயரின் தன்மையை பொறுத்தே அதன் செயல்பாடு அமையப்பெறும்.

பஞ்சபூதம்(EARTHETIC  FIVE  ELEMENTS)

ப்ருதிவி
- திரு.காஞ்சி
அப்பு
திருவானைகாவல்
தேயு
- திருவண்ணாமலை
வாயு
- திருக்காளத்தி
ஆகாயம்
- சிதம்பரம்

இந்த உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் என்பனவாகும். இதன் தோற்றம் விண்ணிலிருந்து காற்றாகவும், காற்றிலிருந்து நீர் ஆகவும், நீரிலிருந்து நெருப்பாகவும், நெருப்பிலிருந்து எரிமலை குழம்பு மூலம் நிலமாக பரிணாம வளர்ச்சியை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இத்தகைய பஞ்சபூதங்களின் தொடர்புகள் தான் நம் உடலிலும் அமையப் பெற்றுள்ளது. ஜீவ உயிர்கள் யாவும் பஞ்ச பூதங்களால் ஆனது. ஜடப் பொருட்கள் என்று கூறப்படுவது பஞ்சபூதங்களால் ஆனது. அந்த காலத்தில் பஞ்சபூதங்களை தெய்வங்களாக கொண்டாடினார்கள். நாம் தெய்வமாக கொண்டாடும் ஒவ்வொரு சடங்கிற்குள்ளும் பல சூட்சும முடிச்சுகளை போட்டு வைத்துள்ளனர். அதன் அருமை, பெருமைகளை எண்ணி வியப்படைந்து கொண்டிருக்கும் இவ்வுலகம், நம் கலாச்சாரங்களைத் தனித்து பார்வையிடுகின்றனர். நாம் அதில் உள்ள சூட்சமங்களை அறியாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கிறோம். இந்தியாவில் உள்ள ஆலயங்கள் யாவும் பஞ்சபூதங்களையும் நவக்கிரகங்களையும் மையமாக வைத்து தான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பஞ்சபூதகளில் ப்ருதவிலிங்கம் என்று அழைக்கப்படும் நிலத்திற்கு அதிபதியாக காஞ்சி அமைந்துள்ளது. நீருக்கு அப்பு லிங்கமாக திருவனைக்காவலும். சிவதலங்களில் தேயு லிங்கமாக திருவண்ணாமலை அமைந்துள்ளது. வாயு லிங்கமாக திருகாளத்தியும், ஆகாயலிங்கமாக சிதம்பரமும் அமைந்துள்ளது. இவ்வாறு பஞ்சபூதங்களை மையமாக வைத்து கோவில்கள் அமையப் பெற்றுள்ளது.
எண்கணிதத்தில் பஞ்சபூதங்களின் பங்கு மிக முக்கியமாக அமைந்துள்ளது. ஒவ்வொருவருடைய தொழில் ஆற்றலையும் உயிர் ஆற்றலையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மனிதனின் பிறந்த தேதியில் ஒரு பூதம் அடிப்படையாக அமையப்பெறும். அது இல்லாமல் இரண்டு பூதங்கள் பிறந்த தேதியோடு தொடர்புடையதாக கண்டிப்பாக அமையப்பெறவேண்டும். அவ்வாறு அமையுமானால் அவர் இப்பூமியில் வாழத் தகுதியுடையவராக ஆவார்.
தமிழ் எழுத்துக்களை எண்கணித முறைப்படி பஞ்சபூதத் தத்துவத்தில் ஐந்து எழுத்துக்களை மட்டும் பகிர்ந்து அளிக்கிறார்கள்.
அதாவது,
- நிலம்
- ப்ருதிவி
- 1
- நீர்
அப்பு
- 2
- நெருப்பு
- தேயு
- 3
- காற்று
- வாயு
- 4
- விண்
- ஆகாயம்
- 5
இவ்வாறு ஐந்து எழுத்துக்களை மையமாக கொண்டு பஞ்சபூதங்களுக்கிடப்படுகிறது. இந்த ஐந்து பூதங்களை மையமாக வைத்து தமிழ் எழுத்துக்களை அடக்கிவிடலாம்.
சுக் + () = நிலம் 
க் + ()= நீர்
இவ்வாறு அனைத்து எழுத்துக்களையும் வடமொழி எழுத்துக்கள் உட்பட பஞ்சபூதங்களின் அடிப்படையில் கணக்கிட முடியும்.
ங் ர் 
1 2 1 2 = 6/5 =
மீதி 1 = நிலம் 

கார்த்திக் 
1 2 2 2 2 = 9/5 = 
மீதி 4 = காற்று 

ப்ரூதிவிராஜ் 
2 3 2 2 1 2 = 12/5 =
மீதி 2 = நீர் 

ஓம்பிரகாஷ்
5 2 2 1 1 2 = 13/5 =
மீதி 3 =  தீ
இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள எண்ணை தொடர்புப்படுத்தி கூட்டிக் கொள்ளவேண்டும். இவ்வாறு கூட்டிய எண்ணை ஐந்தால் வகுக்க வரும் மீதியை அவருடைய பஞ்சபூதத் தன்மையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
சங்கர் = நிலத்தின் தன்மையில் பெயர் உள்ளது.
கார்த்திக் = காற்றின் தன்மையில் பெயர் உள்ளது.
ப்ருதிவிராஜ் = நீரின் தன்மையில் பெயர் உள்ளது.
ஓம் பிரகாஷ் = நெருப்பின் தன்மையில் பெயர் உள்ளது.

காந்தி
1 2 2 =5 – 5 = 5 =
விண் 
மீதி 0 வருமானால் 5 என்று எடுத்து கொண்டு விண்ணின் தன்மையை உடையது என வைத்துக் கொள்ளவும்.

பிர்லா 
2 2 1 = 5 - 5 = 0 = 5
விண் 
ரஜினிகாந்த் 
1 2 2 1 2 2  = 10 - 5 = 0 =
விண்
இவ்வாறு கணக்கில் கொள்ளவேண்டும். ஒருவருடைய பெயர் எந்த பூதத்தின் தன்மையில் அமைந்துள்ளது என அறியலாமே.
பிறந்த தேதியில் அமைந்துள்ள பூதத்தோடு பெயரில் உள்ள பூதம் ஒப்புமையாக அமையும் பட்சத்தில் மிக உன்னத நிலையை அடைய முடியும்.
பிறந்த தேதி 1 எனில் நிலமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
2, 7, 12, 17, 22, 27, தேதிகள் நீரை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
3, 8, 13, 18, 23, 28
தேதிகள் நெருப்பை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
4, 9, 14, 19, 24, 29
தேதிகள் காற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும்.
5, 10, 15, 20, 25, 30
தேதிகள் விண்ணை அடிப்படையாக கொண்டு இயங்கும்.

இதில் எந்த பூதத்தின் தன்மையில் ஒருவர் பிறந்துள்ளாரோ அந்த பூதத்திற்கு சாதகமான பூதத்தின் பெயர் அமையவேண்டும்.உதாரணத்தில் நீரின் தன்மையில் பிறந்தவருக்கு நெருப்பின் தன்மையில் பெயர் அமையக் கூடாது. நீருக்கு, நெருப்பு எதிர்மறையான வினை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவ்வாறு பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டு பெயர் அமையும் பட்சத்தில் உயிர் ஆற்றலும், தொழில் ஆற்றலும் பாதிக்காமல் இருக்கும்.

பெயர் நம்மை எப்படி இயக்குகிறது?

இந்த உடல் அணுக்களால் கட்டப்பட்ட ஒரு ஆலயம். இந்த ஆலயத்தில் மூலஸ்தானமாக அமைந்திருப்பது கருமையம் ஆகும். அணுக்களால் கட்டப்பட்ட இந்த உடல் என்பதை பாரதியின் ஒரு பாடலைக் கொண்டு நினைவு கூறலாம். "காக்கை, குருவி, எங்கள் சாதி! காடு, மலைகள், எங்கள் கூட்டம்" என்ற வரியை கூர்ந்து கவனித்தால் பாரதி என்ற கவிஞன் மிக பெரிய காந்த தத்துவத்தை விளக்கும் ஞானியாக இருந்துள்ளார் என்பதை நாம் அறிய முடியும்.
காக்கை, குருவிகள் எங்கள் சாதி காடு, மலைகள், எங்கள் கூட்டம் என்ற சொல் காக்கை குருவி பசித்தால் உண்ணும் எங்களை போன்ற ஒரு சாதி என்றும் காடு மலைகள் எங்களை போன்று அணுக்களின் கூட்டம் என்றும் கூறுகின்றார்.
அணுக்களால் கட்டப்பட்ட இந்த உடலுக்குள் இயங்கும் அற்புதங்கள் ஏராளம் ஏராளம்அண்டவெளியில் அமைந்துள்ள அனைத்தையும் இந்த உடலுக்குள் காணமுடியும். மறைபொருளாக இருக்கும் இந்த பிரபஞ்சம் முழுவதும் நம் உடலுக்குள் தொடர்பு வைத்துக் கொண்டு உள்ளது. இதனால் தான் நம் அறிஞர்கள் கடவுள் = கட+வுள் உள்ளே கடந்து பார் என்று கூறினார்கள். உள்ளே கடந்து பார்த்தால், அண்டவெளியில் நமக்கு தெரியும் இந்த உலகத்தையே நம் முன் காணமுடியும் என்பதை மகாபாரதத்தில் கிருஷ்ணர் தன் வாயைப்பிளந்து  உலகை காண்பித்தார்.
அவ்வாறு கிருஷ்ணர் செய்தது நாம் அவர் வாயினுள் பார்க்க அல்ல. நம் முன் பாருங்கள் இந்த உலகத்தை அறியலாம் எனக் கூறினார். இந்த சக்திகளம் முழுவதும் என்ன உள்ளது எனப்பார்த்தால் நவக்கிரகங்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த பூமியில் பஞ்சபூதங்கள் நிறைந்துள்ளன. அதற்கப்பால் சுத்தவெளி அமைந்துள்ளது. பஞ்சபூதங்களின் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு அழுத்தம் ஒலி, ஒளி, சுவை, மணம், உயிரினங்களில் மனம் என தோன்றின. உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியில் மனம் என்ற ஒன்றை உணரும் மனிதன் ஆறாவது அறிவை கொண்டு தோன்றினான்.
இந்த அடிப்படையில் உயிரினம் தவிர பஞ்சபூதம் நவக்கிரகங்கள் அனைத்தும் நம் உடலோடு தொடர்பு வைத்துக் கொண்டுள்ளன. நவக்கிரகங்களும், பஞ்சபூதங்களும் உடலுக்குள் ஒரு பகுதியாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.
உடல் என்பது நம் கண்ணுக்குத் தெரிந்த பரு உடல் எனக் கருதக் கூடாதுபரு உடலோடு கூடிய உயிருடல், மன உடல், மின் உடல் என நான்கு உடல்கள் உள்ளனஇவற்றுள் மறைபொருளாக உள்ளது அறிவு, பரு உடல், உயிர் உடல், மன உடல், மின்னுடல், என நான்கு உடல்களில் மன உடலாகியதில் ஆழ்மனம், அடிமனம், மேல்மனம் என்ற மூன்று நிலைகள் உண்டு. இதில் ஆழ்மனதில் மிக அதிகமாக பதிவாவது நம் பெயரெயாகும்.
இந்த ஆழ்மனம் நம்முடைய பெயரை நம்மையறியாமல் திரும்ப திரும்ப கூறி கொண்டிருக்கின்றன. இந்த பதிவின் விளைவாகஉடலிலும் பரவி இந்த உடலுக்கு அப்பாலும் பரவி செல்கிறது. இந்த உடல்பதிவை தான் அதாவது ஜீவ உடலில் ஏற்படும் பதிவை ஜீவகாந்தப்பதிவு என்றும் இவ்வாறு ஜீவகாந்தத்தில் பதிந்த நம் பெயர் வான் காந்தத்திலும் பதிவடையும்.
இவ்வாறு வான்காந்தத்தில் பதிவடையும் பொழுது தான் அது நம்மை சுற்றி சூழ்நிலைகளை உருவாக்குகின்றன. ஆழ் மனப்பதிவை நாம் எப்படி அறியமுடியும் என்றால் நம் வேறு செயல்கள் செய்து கொண்டிருக்கும் பொழுதும் சரி சாலையில் நடந்து கொண்டிருக்கும் பொழுதும் சரி "சேகர்" என நமது பெயரை யாராவது கூப்பிடுவாரேயானால் உடனே திரும்பிப் பார்க்கின்றோமே ஏன்? இது தான் ஆழ்மனதினுடைய தன்மை. ஆழ்மனதிற்கு மிகுந்த வலிமையும், வல்லமையும் உண்டு முன் கூறியபடி ஒருவர் தூக்கத்திலேயே சட்டென கொசுவை அடிக்கிறார், அடிக்கத் தூண்டியது எது என்றால் அது தான் ஆழ்மனதினுடைய விளைவு. நாம் உறங்கினாலும் ஆழ்மனம் எப்போதும் விழிப்புணர்வுடன் உள்ளது என்பதை அறிகிறோம்.
இத்தகைய தன்மை கொண்ட ஆழ்மனம் நம்மையறியாமல் பெயரைப் பதிவு செய்து கொண்டேயுள்ளது. இவ்வாறு ஆழ்மனதில் நம் பெயர் பதிவடைந்து மூன்று உடலிலும் பரவி ஜீவகாந்தப்பதிவாகி பிறகு வான் காந்தப்பதிவாகி நம் சூழ்நிலையை அமைக்கின்றது.
ஒருவருடைய பிறந்த தேதி, குணாதிசயத்தையும் விதி எண் நாம் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய முடியும் என்பதையும், அந்த பிரயாணத்தையும் நாம் எப்படி செய்கிறோம் என்பதையும் நம் பெயர் நிர்ணயம் செய்கிறது. நம் பிறந்த தேதி முன் கூறியபடி கர்ம பலனின் வாயிலாக நிர்ணயம் ஆகிறது. விதி எண் என்பது பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும்  கூட்டி வரும் எண், ஒரு கிரகத்தின் ஆதிக்கத்திற்குட்பட்டு. இந்த விதி எண் ஒருவர் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய முடியும் என்பதை குறிக்கும். அதாவது புகழை எடுத்து கொள்வோம் ஒருவர் தெரு அளவில் புகழ் அடைய முடியும் என்பதையும், ஊர் அளவில் புகழ் அடைய முடியும் என்பதையும், மாவட்ட அளவில், மாநில அளவில், இந்த நாடு அளவில் என அவருக்கு விதிக்கப்பட்ட விதியை நிர்ணயம் செய்ய கூடியதாக இவையாவும் பஞ்சபூதங்களையும்  நவக்கிரகங்களையும் அடிப்படையாக கொண்டு சொல்லபடுகின்றன. பஞ்சபூதங்களும், நவக்கிரகங்களும் நம்மை இயக்குகின்றன. எல்லா கிரகங்களும் இயக்கிக் கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கிரகங்கள் தனது ஆட்சிக்குட்படுத்துகின்றது. அவ்வாறு ஆட்சிக்குட்படுத்தும் பொழுது நம் செயல்பாடுகள், உடல் நோய்கள் என ஏற்படுகின்றன.
அனைத்து கிரகங்களும் நம் முன் இயங்கிக் கொண்டிருந்தாலும் பிறக்கும் நாள் அன்று 9 கிரகங்களில் 4 கிரகங்கள் முழு ஆதிக்கம் செலுத்துகின்றது. இந்த 4 கிரகங்களும் நம் வாழ்வோடு ஒன்றி பிணைக்கப்பட்டு இருக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கையினால் ஏற்படக்கூடிய விளைவுகள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்ஒருவர் 22-6-1998 அன்று திங்கள்கிழமை பிறக்கிறார் என்றால் அவருக்கு ராகு, சூரியன், புதன், சந்திரன்  என்ற 4 கிரகங்களின் முழு ஆதிக்கத்திற்குட்படுகிறார். அதாவது பிறந்த தேதி 22 என்பது ராகு கிரகத்தின் ஆதிக்கத்தையும், ஜூன் மாதம் 22 என்பதால் புதன் ஆதிக்கத்தையும், விதி எண் 1 என்பதால் சூரியனின் ஆதிக்கத்தையும், திங்கட்கிழமை என்பதால் சந்திரனின் ஆதிக்கத்தையும் பெறுகின்றார். அதைப்போல் பஞ்சபூதங்களின்  அடிப்படையில் உப்பு நீரின் தன்மையில் பிறந்துள்ளார்.  "இவ்வாறு நான்கு கிரகத்தின் ஆதிக்கத்திலும் பஞ்சபூதங்களின் நீரின் ஆதிக்கதிலும் பிறந்துள்ளார்".  இதனால் ஏற்படக்கூடிய பலன்கள் தொடர்ந்து சம்பவித்துக் கொண்டே இருக்கும். இதை நிலையானது (Constant) எனலாம்இம்மாதிரியான நான்கு கிரகங்களின் சேர்க்கையிலும், பஞ்சபூத சேர்க்கையிலும் எந்த மனிதனும் கஷ்டப்படவேண்டும் என்பதோ அகால மரணம் அதாவது எதிர்பாராத விபத்திலோ, திடீர் மரணம் ஏற்படவேண்டும் என்றோ கிடயாது.
இந்த நான்கு கிரக ஆதிக்கமும் பஞ்சபூத சேர்க்கையும் நமக்கு நன்மைகளை வாரி வழங்குகிறதே தவிர தீமைகள் ஏற்பட வழிவகுக்கவில்லை. இதிலிருந்து, பிறக்கும் எந்தன் மனிதனும்  துன்பப்படுவதற்காக பிறக்கவில்லை என்பது தெரியவருகிறது. இவ்வாறு நான்கு கிரகங்களின் சேர்க்கை சரியில்லாது இருக்கும் போது பெயரின் உதவியைக் கொண்டு சரிசெய்துக் கொள்ளமுடியும்.
எந்த சூழ்நிலையிலும் கிரகங்களின் சேர்க்கை சரியில்லாத போதும் சுகமான வாழ்க்கையாவது தருகிறதே ஒழிய துன்பப்படுத்துவது இல்லை. துன்பத்திற்கு பெரிதும் காரணமாக இருப்பது பெயரே ஆகும். அதாவது பெயரில் 3 கிரகம் அமைந்துள்ளது. எப்படி எனில் இனிசியலில் ஒரு கிரகம் பெயரில் ஒரு கிரகம், இனிசியலோடு பெயரும் சேர்ந்து ஒரு கிரகம். பெயரே ஆட்சி செலுத்துகிறது.
இந்த பெயரில் உள்ள 3 கிரகமும் ஏற்கனவே பிறந்த தேதியில் உள்ள 4 கிரகங்களோடு ஒத்தும் உதவியாகயிருக்கும்படி அமைத்து பெயரில் பஞ்சபூதத்தின் அடிப்படையிலும் பெயர் சரியாக அமைத்தால் திட்டவட்டமாக சிறப்பான வாழ்வு உண்டு. எதிர்பாராத விபத்தினால் மரணமில்லை. குற்றவாளி என்கிற அமைப்பில்லை. துன்பம், கஷ்டம். நஷ்டம் என்பதில்லை. பஞ்சபூதங்களால் பதிப்புகள் கிடையாது. மனதில் அமைதியும், ஆனந்தமும் நிரந்தரமாக நிலைக்கும். செல்வ செழிப்பு கிடைக்கும். நினைத்தது நடக்கும். செயல்பாடுகள் யாவும் உலக நன்மைக்கு பயன்படும்.
எதிர்பாராத விபத்தினால் மரணமில்லாமல், குற்றவாளிகள் அற்ற துன்பமற்ற செல்வ செழிப்போடு மக்களின் மத்தியில் அமையும், ஆனந்தமும் பெற்று ஒரு உலகம் அமையுமானால் எப்படி இருக்கும் என சிந்தியுங்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. அந்த நாளை எண் கணிதத்தால் பெறமுடியும். நம்மையும் இந்த உலகத்தையும் பெயரே இயக்கிக் கொண்டிருக்கின்றது. ஆம், இதற்கு பல உதாரணம் கூறலாம்.
கோயமுத்தூர் என்று உபயோகித்து கொண்டிருந்தவரை ஊர் சிறப்பாக இருந்தது. கோவை(Covai) என்ற பெயர் உபயோகப்படுத்தியதிலிருந்து அழிந்து கொண்டிருக்கிறது.
C  O  V  A  I
3+7+6+1+1 = 18
18 என்ற எண் சூரியனும், சனியும் சேர்ந்து ஆதிக்கமாக கொண்டதினால் தீக்கிறையாக வேண்டும் என்பதே எண் கணிதத்தில் விதிக்கப்பட்ட விதி. சூரியனை பிரதானமாக வைத்து கேது சேர்ந்தாலும்சனி சேர்ந்தாலும்சுக்கிரன் சேர்ந்தாலும் எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. மற்றொரு உதாரணம் கூறலாம்.
S   R  I  L  A  N  K  A
3+2+1+3+1+5+2+1 = 18
எண் கொண்ட ஸ்ரீலங்காவும், ராமாயண காலத்திலிருந்து எரிந்து அழிந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கான சூழ்நிலையை பெயரே அதாவது பெயரில் உள்ள கிரகமே ஏற்படுத்துகிறது.
மேலும் சமீபத்தில் கோவையில் எரிந்து சாம்பலான ஷோபா என்ற கடைக்கும் பெயர் 18 எண் அமைந்ததே காரணம்.
S  H  O  B  A
3+5+7+2+1 = 18
என்ற எண்ணாகும். இதிலிருந்து பெயரில் உள்ள எண்ணுக்கு எத்தகைய வலிமையுள்ளது என்பதை அறியலாம்.
இவை ஊர்களுக்கும், நாடுகளுக்கும் பொருந்த கூடியவை. இன்னும் பல நாடுகளையும் கூறலாம். இதை போல் மனிதர்களுக்கும் இனிசியலிலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ, சூரியனை பிரதானமாக வைத்து சுக்கிரனோ, கேதுவோ, சனியோ, வருமானால் எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. அதாவது இனிசியலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ 16,17,18எண் வருமானால் எதிர்பாராத விபத்தினால் மரணம் என்பதை திட்டவட்டமாக கூறிவிடலாம். இதற்கு பல உதாரணங்களை கூறலாம்.
உதாரணமாக,
முன்னாள் ராணுவத்துறை அமைச்சர் N.V.N சோமு அவர்களுக்கு 5+6+5 = 16இன்சியலில் 16 எண் அமைந்தால் எதிர்பாராத விபத்தினால் மரணம் அடைந்தார்.
இந்த எண்ணுடைய குணம் யாதெனில் இந்த எண் வரும் பெயரை உடையவருக்கு ஆரம்பத்தில் கெடுத்துக் கொண்டேயிருக்கும். இது எப்போது உச்சநிலையை அடைகிறதோ அப்போது உயர்ந்த நிலைக்கு இழுத்துச் சென்று திடீரென எதிர்பாராத விபத்தினால் மரணத்தை ஏற்படுத்தும். அந்த மரணமும் உடல் சிதறக்கூடிய வகையில் அமையும். மேலும் உதாரணம், பிரிட்டிஸ் இளவரசி
C. D  A  Y A  N  A
3. 4+1+1+1+5+1 = 16
எண் அமைந்துள்ளதால் அதனுடைய விளைவையடைந்தார். இதுபோல எண்ணில் அடங்கா உதாரணங்களை கூறிக் கொண்டேயிருக்கலாம். இந்த எண்ணில் உள்ள குணம் கவிழ்விக்க கூடிய குணம் ஆகும்.
அதே போல்
J  A  P  A  N
1+1+8+1+5 = 16
எண் அமைந்துள்ளதால்  நாடு எவ்வளவு தான் வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தாலும் அது வீழ்ச்சியை அடைந்துக் கொண்டுதான் இருக்கும். இதற்கடுத்தாற்போல் 17 என்ற எண்ணும் சூரியனை பிரதானமாக வைத்து கேதுவின் ஆக்கத்திற்குட்பட்டது.
அதாவது இந்த எண்ணினுடைய தன்மை யாதெனில் ஒருவரை கார் வாங்கும் அளவிற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி அதே காரிலேயே எதிர்பாராத விபத்தினை ஏற்படுத்தக் கூடியது. அதாவது மோட்டார் வாகனத்தில் விபத்து என்பது தான் விதிக்கப்பட்ட விதி. இவை அன்றாடம் ஏராளமான நபர்களை பார்க்க கூடிய அளவில் தான் உள்ளது.
மேலும் இனிசியலோ, பெயரிலோ மொத்த எண்ணிலோ 8 எண் வருமானால் பஞ்சபூதங்களால் பாதிக்கப்படலாம்.
எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுவதற்கு காரணம் உள்ளது. அதாவது இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ சனியினுடைய ஆதிக்கத்தில் அமையுமானால் எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது.
உதாரணமாக, நம் பாரதப் பிரதமர்களில் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராஜிவ் காந்தியின் தம்பி சஞ்சய் காந்தியும் எதிர்பாராத விபத்தினால் மரணம் அடைந்தனர். இதற்கு காரணம் இவர்களது தந்தையின் மற்றும் கணவரது பெயர் ஃபெர்ரோஸ்காந்தி  என்பதால் இனிசியல் "F" அதாவது 8-ன் தன்மையில் சனியினுடைய ஆதிக்கத்தில் அமைந்தமையால் எதிர்பாராத விபத்தினால் மரணம் விளையக்காரணமாய் இருந்தது.
இதைபோல ஏராளமான உதாரணங்களை தரலாம். இத்தகைய சனியினுடய ஆதிக்கத்தினால் பெரியசாமி, பொன்னுசாமி இவர்களை போன்றவர்களின் பிள்ளைகள் பெரிதும் பதிப்புகுள்ளாகிறார்கள்இந்த எண்ணினுடைய குணம் யாதெனில் வாழ்க்கையின் முன்னேற்றத்தை, சுகத்தை, சந்தோஷத்தை, எந்த அளவில் கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு கொடுத்து முடிவில் பஞ்சபூதங்களலோ, எதிர்பாராத விபத்தினாலோ மரணத்தை ஏற்படுத்துகிறது.
அடுத்ததாக  சந்திரனை எடுத்து கொள்வோம். சந்திரன் பிரதானமாக வைத்து சந்திரனே இணைந்தாலும் சுக்கிரன் இணைந்தாலும், செவ்வாய் இணைந்தாலும் கெடுதலான விதியையே அடைகிறது. அதாவது 22, 26, 29 என்பது போன்ற பெயர்களிலோ, இனிசியலிலோ மொத்த எண்ணிலோ வருமானால் எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது. அதாவது சந்திரனோடு சந்திரன் இணையும் பொழுது சுயநலவாதிகளால் சூழப்படக் கூடிய நிலையும், சுயநலவாதிகளால் பயன்படுத்தப்பட்டு எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது.
அதே போல் சுக்ரன் இணையும் பொழுது எதிரிகளால் சூழப்பட்டு எதிரியால் மரணம் என்பது. இதற்கு விதிக்கப்பட்ட விதியாகும். அதாவது எதிரிகள் என்பது ஆட்களாக இருக்கலாம். வாகனமாகவோ அல்லது  விஷ மருந்தாகவோ கூட இருக்கலாம். ஆக மொத்தம் திடீரென எதிர்பாராதபடியே விபத்தாகவே வாழ்க்கை முடிகிறது.
அதே போல் செவ்வாய் சேரும் பொழுதும் மிக கெடுதலான பலன்களே நடக்கிறதுஅதாவது கோர்ட், கேஸ் என வழக்குகளால் அலைக்கழிக்கப்படுவதாக அமைகிறது. மற்றவர்கள் முன் இவர்கள் குற்றவாளிகளாக நிற்கும் நிலை ஏற்படும்.
இதற்கடுத்தாற்போல குருவை பிரதானமாக வைத்து புதன் (35) சேர்க்கையும் சிறப்பானதல்ல. இவை வீண் தொல்லைகளையும், வம்பு வழக்குகளையும் உண்டு பண்ணும். தவறான வழிக்கு இழுத்துச் செல்லும்படி மனதை தூண்டும். அதையும் மீறி இவரால் சேர்க்கப்பட்ட செல்வம் இவர்கள் முன் அழிந்து, இவரும் எதிர்பாராத விபத்தினால் மரணம் அடையவேண்டும் என்பதே விதி.
அதே போல குருவை பிரதானமாக வைத்து சனி சேர்க்கையும் (38) பெரிய ஆட்களுடைய தொடர்புகளை ஏற்படுத்தி மனத்தில் துக்கத்தை ஏற்படுத்தும். உயர்பதவி, புகழ், அரசாங்க ஆதரவுகளை ஏற்படுத்தி எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுகிறது.
இதேபோல ராகுவின் இரட்டை சேர்க்கையும் (44) சட்டவிரோதமான காரியம் தீயவழிகளில் பணம் சேர்க்க முயல்வர். பிற்காலத்தில் அனைத்தையும் பறிகொடுப்பர். ஒரு காலையோ, கையையோ இழக்க வேண்டிவரும். இதே நிலை நீடித்து முடிவில் விபத்தினால் மரணத்தை ஏற்படுத்துகிறது.
இதேபோல ராகுவோடு செவ்வாய் சேர்க்கை (49) செல்வத்தை வேகமாக கொடுத்து ஒரு கலையோ, கையையே இழக்க செய்து எதிர்பாராத விபத்தினால் மரணத்தை ஏற்படுத்துகிறது.
இதேபோல 8, 16, 17, 18, 22, 26, 29, 35, 38, 44, 48, 49, 53 போன்ற எண்கள் பெயரிலோ, இனிசியலிலோ, மொத்த எண்ணிலோ வருமானால் எண் கணித முறைப்படி பெயரை சரிபார்த்து திருத்தியோ, மாற்றியோ அமைத்துக் கொள்வதன் மூலம் தீய விளைவுகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம். இதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. எப்படி நம் பெயரை கண்டறிவது என்றால்,
A, I, J, Q, Y
= 1
B, K, R,
= 2
C, G, L, S
= 3
D, M, T
= 4
E, H, N, X
= 5
U, V, W
= 6
O, Z
= 7
F, P
= 8

என்ற எண்களை நினைவில் கொண்டு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் தனித்தனியாக பிரித்து எழுதி அதற்குரிய மதிப்பெண்களை போட்டு இனிசியல் தனியாகவும், பெயரை தனியாகவும், மொத்த எண்களை தனியாகவும் கூட்டி பார்க்க முன் சொன்ன 8, 16, 17, 18, 22, 26, 29, 35, 38, 44, 48, 49, 53 போன்ற எண்கள் வருகின்றதா என பார்க்கவேண்டும்.
S. R. THANGARASU என பெயரை கையெழுத்திடுகிறார் என வைத்து கொள்வோம்.
S. R. THANGARASU
3. 2. 45153312136
5.       31        = 36
இதில் இனிசியல் எண் 5 ஆகியும், பெயர் எண் 31எண் ஆகவும், மொத்த எண் 36 எண்ணாகவும் அமைந்துள்ளது. அதேபோல
 P. GANESAN
 8. 315531
 8.    23     = 31
இதில் இனிசியல் எண் 8, பெயர் எண் 23 ஆகவும், மொத்த எண் 31 எண்ணாகவும் அமைந்துள்ளது. இதில் இனிசியலில் 8 எண் இருப்பது நல்லதல்ல.
R. SANKAR
2. 315212
2.      14    = 16
இதில் இனிசியல் எண் 2, ஆகவும், பெயர் எண் 14 ஆகவும், மொத்த எண் 16 ஆகவும் அமந்துள்ளது. இதில் மொத்த எண் 16 ஆக உள்ளது நல்லதல்ல.
மேலும்,
V.N.V  SUNDHAR
6.5.6  3654512
17.    26    = 43
இதில் இனிசியல் எண் 17 எண்ணும், பெயரில் 26 எண்ணும், மொத்தத்தில் 43 எண்ணும் அமைந்துள்ளது. பெயரும் இனிசியலில் உள்ள எண்களும் நல்லதல்ல.
சரியான முறையில்சரியானபாதைக்கு அழைத்துச் செல்வோமானால் இந்த உலகம் சரியான பாதையில் அதாவதுவெற்றிப் பாதையில் செல்லும். தனி மனிதனுடைய முன்னேற்றமே அவன்குடும்பத்தினுடைய முன்னேற்றம், அந்த குடும்பத்தினுடைய முன்னேற்றமே அந்தஊரினுடைய முன்னேற்றம், அந்த மாநிலத்தின் முன்னேற்றம், அந்த மாநிலத்தினுடையமுன்னேற்றமே அந்த நாட்டின் முன்னேற்றம், அந்த நாட்டின் முன்னேற்றமே இந்தஉலகத்தினுடைய முன்னேற்றம்.
ஆகவே முதலில் நம் தேவை தனி மனிதனுடைய முன்னேற்றம் இந்த தனி மனிதனுடைய முன்னேற்றம் பொருளாதாரத்தாலோகுடும்பச் சூழ்நிலையாலோ எதிர்பாராமல் தடைபடுமேயானால்அது இந்த உலக முன்னேற்றத்தை பாதிக்கிறது. ஆகவே தனி மனிதன் பொருளாதாரத்தில் முன்னேற்றமும், மனதில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் பெற்று வாழ தனி மனிதனுடைய பெயரை சரிபார்த்து அமைத்து கொள்ளவேண்டும்.

எழுத்தின் விகிதச்சாரம் (Percentage)

எழுத்தின் விகிதச்சாரத்தில் ஈர்ப்பு சக்தியின் அடிப்படையில் எழுத்திற்கு உள்ள விகிதச்சாரம் தான் நம் சக்திக்குரிய எழுத்தின் விகிதச்சாரம் என இருவகையாக அமையப்பெறும். Astronomy Sound Value, Pronology Sound Value என்பதாகும். ஒரு பெயரில் எத்தனை எழுத்துக்கள் பிரித்து உபயோகப்படுத்தியுள்ளோம். எப்படி பயன்படுத்துவது என்பது விகிதச்சாரம் பார்ப்பது. ஒரு சிலருக்கு சூரியனின் ஆதிக்கத்தை மிகைப்படுத்த வேண்டும் என்பதற்காக விகிதச்சாரம் பார்த்து மிகைப்படுத்த உதவும் கணக்கு.
இவ்வாறு இருவகையிலும் பார்த்துக் கணக்கிடும் பொழுது பெயருக்கு மேலும் ஆற்றல் பிரவாகம் எடுக்கும்.
உதாரணமாக M. JAYAPRAKASH என்ற பெயருக்கு எழுத்தின் விகிதச்சாரம் என்ன என பார்ப்போம்.
Astronomy Sound   
Pronology Sound
1   50%
1   50%
2   16.7%
2   8%
3   8.3
3   0%
4   8.3%
4   8%
5   8.3%
5   0%
6   0%
6   0%
7   0%
7   17%
8   8.3%
8   8%
9   0%
9   8%

இவ்வாறு மேற்கூறியபடி ஒருவருடைய பெயரில் எத்தகைய கிரகத்தின் வலிமை மிகுதியாக இருக்கவேண்டும் என்று ஆய்வு செய்து அதற்கு தக்கபடி கிரகங்களை விகிதச்சாரம் வாயிலாக பிரித்து கணக்கிடப்படுகிறது.

காந்தத்தத்துவம் : (Magneto Therophy)

இந்த காந்தத்தத்துவம் என்பது ஒருவருடைய கர்ம பலனின் வெளிப்பாடு என கூறுகிறோம். பிராரப்திய கர்மம் என்பது ஏற்கனவே கூறியபடி இன்று வரை ஒருவர் செய்த செயல்களின் விளைவுகளின் பதிவு பிராரப்திய பதிவு எனப்படும். சஞ்சித கர்மம் பதிவு என்பது நமது முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய மூட்டைகளின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பதிவு இந்த இருபதிவுகளும் இணைந்து ஆகாமிய கர்மப் பதிவு ஏற்படுகிறது.
1. பிராரப்திய கர்மப் பதிவு+சஞ்சித கர்மப் பதிவு = ஆகாமிய கர்மப் பதிவு
2.
சஞ்சித கர்மப் பதிவு + பிராரப்திய கர்மப் பதிவு = ஆகாமிய கர்மப் பதிவு = காந்தத்தத்துவ பதிவு
ஒருவர் வயது ஏறிய நிலையில் 20,25,50 என பல வயதுகளில் கணக்கிடும் பொழுது பிராரப்திய பதிவுகள் தெரியவரும் இங்கு பிராரப்திய பதிவு என்ன என்பதையும், சஞ்சித கர்மப் பதிவு என்ன என்பதையும் அறிந்து காந்தத்தத்துவ அடிப்படையில் ஆகாமிய கர்மத்தை நிர்ணயிக்கச் செய்யலாம். இது ஒரு விதம்.
ஒரு பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் பட்சத்தில் இவருக்கு எங்கிருந்து பிராரப்திய கர்மம் ஏற்படுகின்றது. இவருக்கு சஞ்சித கர்மப் பதிவை மட்டுமே வைத்து கொண்டு பெயர் அமைக்கும் பட்சத்தில் அந்த பெயரும் சஞ்சித கர்மமும் இணைந்து செயல்படும் பொழுது பிராரப்திய கர்மப் பதிவு என்னவாக இருக்கும் என கணக்கில் கொண்டு ஆகாமிய கர்ம பலனை அமைக்க முடியும்.
ஆக காந்தத் தத்துவத்தின் அடிப்படையில் ஒருவருடைய விதியை மாற்றியமைப்பது எளியது. நல்ல செயலை ஊக்கப்படுத்துவது மூலம் நல்ல எண்ணங்களும், நல்ல சொற்களும், நல்ல செயல்களும் ஏற்படுகின்றது.
இந்த காந்தத்தத்துவம் அடிப்படையில் ஒருவருடைய கையில் உள்ள நவக்கிரகங்களின் செயல்பாட்டை நாளமில்லா சுரப்பிகளின் வாயிலாக தாக்கத்தை கிரகங்களின் வாயிலாக மூன்று பிரிவாக பிரித்து கணக்கிடப்படுகிறது.
1. நன்மை = (Positive) = Clockwise
2.
தீமை (Negative) = Anti Clockwise
3.
நன்மை- தீமை இல்லாமல் (Neutral) = Straight

இவ்வாறு காந்தத் தத்துவ அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதனை ஸ்கேன் என்றும் கூறப்படுகிறது.
நம் உள்ளங்கையில் 9 கிரகங்களின் தாக்கம் 8 நாளமில்லா சுரப்பிகளின் தாக்கமும் தெரியவரும்.
 1
 2
 5
 6
 7
 9


 1
 5
 6
 7
 9
-50%

 1
 5
 6
 9
- 60%

 1
 5
 9
-70%

 5
 9
-90%

 5
-100%




இந்த அடிப்படையில் ஸ்கேன் செய்து பார்த்த பிறகு மேலும், அதிகபட்ச நன்மை தரும் கிரகம் எது என கண்டறிய மேலே உள்ளபடி பில்டர் (Filter) செய்யும் பொழுது ஆய்வு செய்யும். நபருக்கு புதன் () கரியன் சுக்கிரன், சந்திரன், குரு, ராகு, கேது, சனி, செவ்வாய் என 100% நன்மை தரும் கிரகத்தை கண்டறியப்படும்.
மேலும் புதன் என்று வரும் பொழுது எதில் பெயர் அமைப்பது  14, 23, 32, 4250, 59, 68, 77, 86 என பார்க்கும் பொழுது மீண்டும் ஸ்கேன் மூலம் பில்டர் (Filter) செய்யப்படும்.
உதாரணமாக :
14
23
32
41
50
59


23
32
41
59
-50%

 23
41
59
-60%

 41
59
-90%

41
-100%



இவ்வாறு அவருக்கு 41 எண்ணில் பெயர் வைக்கலாம் என தீர்மானம் செய்யப்படுகிறது. இவ்வாறு காந்தத் தத்துவம் அடிப்படையில் ஒருவருக்கு எத்தகைய எண்ணில் பெயர் அமைத்தால் சஞ்சித கர்மப் பதிவையும், பிராரப்திய கர்மப் பதிவையும் சமன் செய்து ஆகாமிய கர்மப் பதிவு எத்தகையதாக நன்மையுடையதாக ஆகும் ஒரு அற்புத கலையை அறிந்து கொள்ள உதவுகிறது. இதன் அடிப்படையில் காந்தத் தத்துவத்தை பயன்படுத்தி பல்லாயிரம் நபர்கள் பயனடைந்துள்ளனர். இந்த காந்தத்தத்துவக் கலையை தெய்வீக கலை என்றும் கூறுவர்.

0 comments:

Blog Archive

Total Pageviews